×

படம் ஓடாததால் எதிர்மறை கருத்துகள்: கங்கனா கவலை

மும்பை: எனது படம் ஓடாததால் எதிர்மறை கருத்துகள் அதிகரித்துவிட்டது. இது கவலையளிக்கிறது என கங்கனா ரனவத் கூறினார்.தக்காட் இந்தி படத்தில் கங்கனா நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இந்த படம், படு தோல்வி அடைந்தது. ஒரு காட்சிக்கு நாடு முழுவதும் 20 டிக்கெட்டுகளே விற்பனையாகி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது இந்த படம்தான். இது தொடர்பான மீம்ஸ்கள் வைரலானது. இது பற்றி கங்கனா கூறியது: தக்காட் படத்தால் நிறைய எதிர்மறை கருத்துகள், விமர்சனங்கள் எழுந்தன. இது எல்லாம் கவலையளித்தது. அதே சமயம், ஜான்சி ராணியின் கதையான மணிகர்னிகா படத்தை நான் தான் இயக்கி நடித்தேன். அந்த படம் பெரும் வசூல் சாதனையை புரிந்த படம். இந்த ஆண்டில் என் மீது எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும் இதே ஆண்டில்தான் லாக்அப் என்ற வெற்றிகரமான டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி நான் மேலும் பிரபலம் அடைந்துள்ளேன். அத்துடன் இந்த வருடம் இத்துடன் முடிந்துவிடவில்லை. இன்னும் 6 மாதங்கள் பாக்கி உள்ளன. மீண்டும் ஒரு வெற்றியுடன் இந்த ஆண்டில் எனது முத்திரையை பதிப்பேன். இவ்வாறு  கங்கனா கூறினார்….

The post படம் ஓடாததால் எதிர்மறை கருத்துகள்: கங்கனா கவலை appeared first on Dinakaran.

Tags : Gangana ,Mumbai ,Gangana Ranawat ,Kangana ,
× RELATED மும்பையில் தொடரும் அதிர்ச்சி; ஆசையாக...